brahmacharya power book

குடும்பம் நடத்தும் குடும்பி – 10

பிரம்மச்சரிய ஒழுக்க வாழ்வின் மேன்மையை உணர்ந்த முன்னோர்கள் ஆண்களுக்கு பிரம்மச்சரிய கல்வியின் முக்கியத்துவத்தையும் சன்னியாத்தின் மேன்மையையும் உணர்த்தி வளர்த்தார்கள், சிற்றின்பங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து  அனுப்பப்பட்டார்கள்

 

சிற்றின்பத்தை விரும்பாத பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் வலிமை மிக்க ஆண்களுக்கு  பேரின்பத்தில் நிலைக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்கள் அவர்கள் மூலமாக  பல்வேறு கலைகளை மேம்படுத்தி அது சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பயன்படும்படி செய்தார்கள்

 

சமுதாயத்தில் மிக வலிமை படைத்த வீரனாக பிரம்மச்சரிய வீரனே திகழ்ந்தான் மிகவும் சக்திவாய்ந்த மருத்துவராக பிரம்மச்சரியத்தில் நிலைத்த மருத்துவரே திகழ்ந்தார் இதுபோல 64 கலைகளிலும் பல உதாரணங்களை எடுத்துக் கூற இயலும் ஏனெனில் அவர்கள் தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை வீணடிக்காது மற்றொரு ஆற்றலாக மாற்றம் செய்யும் திறனை உன்னதமான பிரம்மச்சரிய கல்வி முறையால் பெற்றிருந்தார்கள்

 

அவ்வாறு பிரம்மச்சரியத்தில் நிலைத்த ஆண்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு  குடும்பத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மிகுந்த மரியாதை கொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அபரிதமான காந்த ஆற்றலின் ஆசியைப் பெற்று பூ உலகையே சொர்க்கமாக மாற்றினார்கள்

 

ஆண்கள் அனைவரும் சன்யாசம் பெற்று பிரம்மச்சரிய வாழ்வுக்கு சென்றுவிட்டால் பெண்களின் நிலை என்ன? இந்த கேள்வி சாதாரணமாக என் வார்த்தைகளை  படிக்கும்போது  கேட்கும்போது போது தோன்றும் அது இயல்பானதே

 

மற்ற ஜீவராசிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், எல்லா  உயிரினங்களிலும் ஒரே ஒரு ஆண் மிருகம் இருந்தால் அதனை சுற்றி பல பெண் மிருகங்கள் சூழ்ந்திருக்கும் அதற்குக் காரணம் உயிரின படைப்பில் ஒரு ஆண் மிருகத்தால்  பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை விந்து சக்தி மூலம் வெளியேற்ற இயலும் ஆனால் பெண் மிருகத்தால் ஒரே ஒரு கருமுட்டையை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்க இயலும்

 

ஒரு சேவல் இருந்தால் அதற்கு இணையாக பத்துக்கும் மேலான கோழிகளை விடுவதும்,  ஒரு ஆண் கிடாய் ஆடு இருந்தால் அதற்கு முப்பது நாற்பது பெண் ஆடுகள் விடுவதும், ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே ஒரு காளை மாட்டினை வைத்து ஊரிலுள்ள அனைத்து பசுமாடுகளுக்கும் சினை உண்டாக்குவதும் நம் தமிழகத்தில் விவசாயம் செய்யும்  அனைவரும் செய்யும் வழிமுறை தான், இயற்கையில் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பாகவே இந்த நிலைதான்

 

இயற்கையானது தானாகவே தனக்கான சமுதாய விதிகளை உருவாக்கி சமன் செய்து கொள்ளும்!, ஆகவே தான்  ஆண்கள் அனைவரும் குடும்ப வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் அக்கால கட்டத்தில் இல்லை…

 

ஆனால் தற்காலத்தில் தன்னை உணரும் வாய்ப்பை மறந்து  ஒவ்வொரு ஆண்மகனும் குடும்பம் நடத்தும் குடும்பி யாகவே வாழவேண்டுமென்று போதிக்கப்பட்டு உண்மைத்தன்மை உணர்த்தப்படாமல் மறக்கடிக்கப்படுள்ளது, உணர்ந்தாலும் சிறுவயது முதல் கற்ற கல்வி முறைகளால் குழம்பி உள்ளனர்

 

தற்கால பழக்கங்களால் உண்மையில் நாம் பலவீனமே  அடைந்து உள்ளோம், இயற்கையை ரட்சித்து காக்க வேண்டிய பொறுப்பை மறந்து இயற்கை வளங்களை சுரண்டி சிதைத்து எதிராக வாழும் நிலைக்கு சென்றுவிட்டோம்

 

நாம் அறிந்த வரையில் இந்த பூமி பல உயிரினங்களும் வாழ்வதற்காக படைக்கப்பட்ட ஒரே உயிர்க்கோளம், ஆனால் நம்மில் பலரும் நம் சுயநலத்துக்காக அழிப்பதற்காகவே இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது என்று வாழ்கிறார்கள்,

 

உண்மை உணர்ந்து ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்வோம் …

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture