நாம் எப்போதாவது இன்பமாக இருக்க வேண்டுமா? அல்லது எப்போதுமே இன்பமாக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

 

நாம் இந்த உலகத்தில் எப்போதும் நிரந்தர இன்பத்தோடு ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதன் வரையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறோம்

 

உண்மையான இன்பத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அடிப்படை புரிதல் வேண்டும்

 

நாம் உண்ணும் உணவும் பஞ்ச பூத பிரபஞ்ச சக்தியும் இணைந்து நம்முடைய உடலில் உயிர் அணுக்கள் உற்பத்தி ஆகிறது, அதாவது ஒரு மாமரத்தில் அதனுடைய சத்துக்கள் அனைத்தும் இணைந்து இறுதியாக மாம்பழம் வருவது போல் நம்மிடம் நம்முடைய சக்திகள் அனைத்தும் இணைந்து உயிரணுக்கள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி உள்ளது

 

உடல் முழுதும் உயிரணுக்களும் அது விரிவு பெற்று உயிராற்றலும்  பரவி இருந்தாலும் அதன் இயக்க மையம் என்பது மூளை மற்றும் இடுப்பு பகுதியை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது

 

எந்த ஒரு அணுவும் இயல்பாகவே சுழலும் தன்மை கொண்டு இருப்பதால் அந்த இயக்கத்தின் விளைவாக காந்த ஆற்றல் விரிவடைகிறது,

 

அதுபோலவே நம்முடைய உயிரணுக்களின்  இயக்கத்தின் காரணமாக ஜீவ காந்த ஆற்றல் உற்பத்தி ஆகிறது, நம்மில் இருந்து வெளிப்படும் ஜீவ காந்த ஆற்றலானது  ஐம்புலன்கள் வழியாக வெளியேறும் போது பார்க்கும் திறன், கேட்கும் திறன்,  நுகரும் திறன், சுவைக்கும் திறன்,  உணரும் திறன் பெறுகிறோம், மேலும் காந்த ஆற்றலானது விரிவடைந்து மூளையின் வழியாக  மனமாகவும் வெளிப்படுகிறது

 

இந்த காந்த ஆற்றலை சூட்சும தேகம் அல்லது ஜீவ காந்தம் என பல பெயர்களில் அழைக்கிறோம்

 

எவ்வாறு மின்சாரமானது அது வெளிப்படும் சாதனங்களுக்கு தகுந்தாற்போல வித விதமான பலன்களை தருகிறதோ, அது போலவே நம் உடலின் ஜீவகாந்த ஆற்றலானது வெளிப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப நமக்கு பயன் அளிக்கும் திறனாக வெளிப்படுகிறது

 

நம் உடலில் உள்ள இந்த ஜீவ காந்த ஆற்றல் புலன்கள் வழியாகவும் மனதின் வழியாகவும் செலவாகும் போது நமக்கு தற்காலிக இன்ப துன்ப உணர்வு கிடைக்கிறது, அதை  சிற்றின்பம் என்று அழைக்கிறோம்!

 

உதாரணமாக நாம் ஒரு இனிப்பு பண்டம் அதாவது ஜிலேபி என்று வைத்துக் கொள்வோம் முதல் ஜிலேபி சாப்பிடும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது சாப்பிடுகிறோம் மிக மிக சுவையாக இருக்கிறது நமக்கு கிடைத்த அந்த சுகம் நம்முடைய நாக்கிலிருந்து கிடைத்ததா அல்லது ஜிலேபியில் இருந்து கிடைத்ததா?

 

சரி மேலும் இன்னும் ஒரு பத்து ஜிலேபி சாப்பிடுவோம் இப்போது பத்தாவது ஜிலேபி சாப்பிடும் போது அது முதல் ஜிலேபி யில் கிடைத்த அதே இன்பத்தோடு இருக்கிறதா?

 

பத்தாவது ஜிலேபி சாப்பிடும்போது நாவினில் சிறிதளவு சுவையும் தென்படவில்லை அதாவது ஒரே வகையான இனிப்பு பண்டம் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு சுவையாகவும் இறுதியாக சாப்பிடும் போது சுவை அற்று துன்பமாக மாறி விடுகிறது

 

இதிலிருந்து நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம் சுவையானது நம்முடைய நாவின் காந்த ஆற்றல் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிறது ஆகவே ஜிலேபி என்பது வெறும் தூண்டுதல் பொருளே

 

அது போலவே உலகத்தில் எந்த ஒரு பொருளின் மூலம் நாம் இன்பம் பெறுகிறோம் என்று நினைத்தாலும்  அது நம்முடைய காந்த ஆற்றல் வெளியேற்றத்தால் நம்மில் இருந்தே அந்த இன்பத்தை பெறுகிறோம்… பாலின்பம் என்பதும் இதே தான்

 

இவ்வாறு நாம் வெளி பொருட்களின் மூலம் நம் உடலில் உள்ள காந்த ஆற்றலை விரயம் செய்து அப்போதைக்கப்போது இன்ப துன்ப உணர்வுகளை பெறுவது சிற்றின்பம் எனப்படுகிறது

 

பேரின்பம் என்பது எவ்வாறு ஐம்புலன்கள் வழியாக, விந்து சக்தியின் வழியாக காந்த ஆற்றல் வீணாகிறது என்று ஆராய்ந்து,  வீணாகும் காந்த ஆற்றலை நம் உடலில் சேமித்து சரியான பாதையில் ஆற்றலை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு திருப்பி எப்போதும் இன்பமாக மகிழ்வாக நிறைந்த ஆற்றலோடு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ நம்மை மேம்படுத்திக் கொள்ளும் உயர்ந்த வாழ்க்கை முறையாகும்,

அதற்காகவே நாம் பிரம்மச்சரிய தியான யோக பயிற்சிகளை வடிவமைத்து தகுந்த வகையில் பயிற்சிகள் அளித்து வருகிறோம்

 

உண்மையில் பேரின்பத்தில் இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை, நமக்குள்ளே நாம் நிலைத்து இருந்தால்  யோக தியான முறைகளில் நம்மை மேம்படுத்துவதற்கும், சமுதாயத்துக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பிரம்மச்சரியம் பெருமளவு துணை புரியும்

 

???????????????????????? – Prakash www.celibacy.in ????

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
Happiness cannot be bought with money. This popular saying holds true especially in the world today, where the importance of having money as the driving force in life is more than evident. This is why it is important to note that in terms of achieving inner peace and contentment, the need for material objects is unnecessary.

The most recent example of this comes from the Karnataka government which has declared that the Class 11 students of the state will not be required to purchase textbooks for the academic year 2021-2022. The need for a textbook is a common feature of any school or college around the world, and in most cases it is a financial liability for the students and their parents. However, the government has recognised that even though textbooks are essential, they should not be a burden for the students.

Instead the government is providing free access to digital content which can be accessed online. This content includes downloadable PDF versions of textbooks, ebooks, animated videos, simulations, audio lectures, etc. which are based on the Board syllabus thus ensuring that students get the same quality and amount of knowledge that the textbooks would have provided.

This move by the Karnataka government is a commendable message from a policy initiatives that inner peace and contentment should not be measured in terms of material possessions. It is a welcome step towards reducing the financial burden on students and a reminder that money cannot always be the only indicator of a successful education. The initiative by Karnataka will hopefully prove to be a trend setter and other governments in India and elsewhere can take inspiration from this move.

Similar Posts