brahmacharya power book

ஆமைபோல் வாழ்வோம்!  – 12

நம்முடைய உடலில் ஆற்றல் இழப்பு முக்கியமாக பின்வரும் ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது

 

  • ஐந்து புலன்கள்

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு போன்றவற்றால் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது

 

  • மனதின் வழியாக

கவலை, பயம் கோபம், பேராசை, தேவையற்ற எண்ணங்கள், கற்பனைகள், காம எண்ணங்கள் என மனதின் வழியாக அபரிமிதமான ஆற்றலானது வீணாகிறது

 

  • இனப்பெருக்கம்

விந்து சக்தி மூலம் வாரிசுகளை உருவாக்குவதற்காக அபரிமிதமான உயிரணுக்கள் அழிக்கப்பட்டு ஆற்றல் வெளியேறுகிறது

 

  • உணவு 

உடலுக்கு பொருந்தாத உணவுகள் எடுத்துக் கொள்ளும் போதும் அதனை செரிமானம் செய்யும் முயற்சியிலேயே உடலில் பெரும்பாலான ஆற்றல் இழப்பு உண்டாகிறது

 

  • உடலுழைப்பு 

உடலுழைப்பு அளவுக்கு மீறி செல்லும் போது ஆற்றல் இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனம் அடைகிறது

 

மேற்கண்ட ஐந்து வழிகளில் ஆற்றல் அபரிமிதமாக பல்வேறு சூழ்நிலைகளில் வீணாகிறது அவ்வாறாக வீணாகும் ஆற்றல்கள் முறையான வழியில் சீரமைத்தால் நாம் ஒவ்வொருவரும் அபரிமிதமான சாதனைகள் புரிய இயலும்,

 

இதையே திருவள்ளுவர் ஆமை தனக்கு ஆபத்து வரும் காலங்களில் எல்லாம் தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் தலையை  (ஐந்து உறுப்புகள்) தன்னுடைய ஓட்டின் உள்ளே இழுத்து காத்துக்கொள்ளும், அதுபோல நாமும் நம்முடைய ஐந்து புலன்களால் வீண் ஆகும் ஆற்றல்களை நமக்குள்ளாக சேமித்து கொள்ளும் வழி அறிந்தவர்களுக்கு அடுத்தடுத்து வரும் ஏழு தலைமுறை வாரிசுகளுக்கும் வலிமையும் ஆற்றலும் தங்கும் என்கிறார்

 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 

எழுமையும் ஏமாப் புடைத்து 

 

ஐம்புலன்கள் வழியாக காந்த ஆற்றலானது விரயம் ஆனாலும் அதனிலும் மேலாக காமத்தின் மூலம் சுய இன்பத்தாலும் இனப்பெருக்க செயல்பாடுகளாலும் வீணாகும் ஆற்றல் மிக மிக அதிகம்

 

ஒரு ஆற்றலானது மற்றொரு ஆற்றலாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும் இது இயற்கையின் நியதி,

 

பிரம்மச்சரிய வழியில் விந்து சக்தியை வீணாக்காமல் இருக்கும் போது நம்முள் உற்பத்தியாகும் அபரிமிதமான உயிராற்றல் காந்த ஆற்றலாக மாறி ஐந்து புலன்கள் வழியாக வெளியேற வாய்ப்பு உண்டாகும்,  அவ்வாறு வெளியேறும் ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்

 

சாதாரணமாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஒரு இளைஞன் பிரம்மச்சரியத்தில் இருந்தால் பல மணி நேரம் சோர்வின்றி பார்த்துக் கொண்டிருப்பான் இது போன்ற சமயங்களில் நாம் எச்சரிக்கையாக பிரம்மச்சரிய ஆற்றலை பயனுள்ள வழிகளில் திருப்ப வேண்டும்

 

அதற்காகவே நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விதமான யோக தியான பயிற்சிகள் வடிவமைத்து கொடுத்துள்ளனர், அவற்றை நாம் நம்முடைய பயிற்சியாகவும் செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக விந்து ஜெயம், காந்த தவம் சூரிய தவம், என பல பயிற்சிகளை தொகுத்து celibacy.in இணையத்தில் celibacy.in இணையத்தில் கொடுத்துள்ளோம்

 

இவ்வாறு அபரிமிதமாக வீணாகும் ஆற்றல்கள் காக்கப்படும்போது காந்த ஆற்றல் மிக்க மனிதர்களாக, வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைக்கும்  மனிதர்களாக, பிறவியின் நோக்கத்தை உணர்ந்து சாதிக்கும் மனிதர்களாக நிச்சயம்  மாற முடியும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture