பருவமும் பிரம்மச்சரியமும் – 13
பாலகர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் பத்து வருடங்கள் கடக்கும் போது மூளையானது போதுமான வளர்ச்சி பெற்றவுடன், உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றலானது முதுகு தண்டு வழியாக கீழிறங்கி இனப்பெருக்க பாகத்தை அடைகிறது,
அதாவது பத்து ஆண்டுகளுக்கு மூளைக்கான கட்டமைப்பு முடிந்தவுடன் மேலும் பத்து ஆண்டுகள் உடலினை கட்டமைக்க உயிராற்றலானது முதுகு தண்டு வழியாக மூலாதார சக்கரத்தை அடைகிறது, உடலின் வளர்ச்சியானது 25 வயது வரை நீடிக்கும்
அச்சமயத்தில் தூய பிரம்மச்சரியத்தில் ஒழுங்காக வளரும் ஆணோ பெண்ணோ முழுமையாக உடல் மன அளவில் வலிமை மிக்க வளர்ச்சி பெறுவார்கள், தகுந்த குருவின் துணையோடு கல்வி வாழ்வை துவங்குபவர்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெறுவார்கள்
ஒரு நல்ல சமுதாயத்தில் வயதுக்கு வந்து பருவம் எய்திய ஒவ்வொரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஆரம்ப கால கட்டங்களிலேயே உடல் மாற்றங்களுக்கான காரணம், உயிர் சக்தியின் பெருமையும் முக்கியத்துவமும் உணர்த்தப்படுவது அவசியம்
பிரம்மச்சரியத்தில் நிலைத்து ஒழுக்கமாக வாழ வேண்டும் மேலும் அதனால் உண்டாகும் பலன்களையும் அந்த ஞானத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே பருவம் வந்த நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி மகிழும் பழக்கம் நம்மிடம் இன்றளவும் இருக்கிறது!
இப்போது நாம் உண்மையில் செய்வது என்ன ? பருவ வயதின் முக்கியத்துவம் புரியாது போனதால் தற்காலத்தில் எல்லாம் வெறும் சடங்காக மாறி விட்டது
குறிப்பாக ஆண் குழந்தைகள் 12 வயது வரை உடலின் மொத்த ஆற்றலும் மூளை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் நம்முடைய முன்னோர்கள் அக்காலத்தில் பெற்றோர்களுடன் கழிக்க வேண்டும் என்று விதித்திருந்தார்கள்
அச்சமயத்தில் ஒவ்வொரு பாலகனும் உறவுகள் மற்றும் சுற்றத்தாரின் வாழ்க்கை முறை, பெற்றோரின் தொழில்களை உடனிருந்து சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தார்கள் 12 வயதுக்கு பிறகு நம் முன்னோர்கள் ஆய கலைகள் 64 என வடிவமைத்து குருகுலங்கள் மூலம் போதித்தார்கள், இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது இயல்பான அன்பும் சமுதாயத்தின் மீது அக்கறையும் சமமாக உயர்ந்தது
அதாவது உடலில் உற்பத்தியாகும் காம ஆற்றலானது மடை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு திறமைகள் உலகிற்கு பயனளிக்கும் விதமாக சரியான பயிற்சி அளிக்கப்பட்டு குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள்
உண்மையான பிரம்மச்சரிய கல்வி முறையாலேயே நம்முடைய பாரத தேசத்தில் காலத்தால் அழியா புகழ் பெற்ற ஆயிரக்கணக்கான குருமார்களும் அவர்கள் மூலம் லட்சக்கணக்கான அறிவு செறிந்த புத்தகங்கள் வேதங்கள் உபநிஷத்துக்கள் புராணங்கள் மந்திரங்கள் சிற்பங்கள் கோவில்கள் எல்லாம் உருவானது
தற்காலத்திலோ பெரும்பாலும் இளைஞர்கள் 12 வயதுக்கு மேல் உற்பத்தியாகும் உயிராற்றலை சுய இன்பம் போன்ற பழக்க தோஷத்தால் வீணாக்கிவிட்டு போதுமான அளவு உடல் வளர்ச்சி இல்லாமல், உடல் அளவிலும் மன அளவிலும் பாதிப்படைகிறார்கள்
சாதாரணமாக உடல் வளர்ச்சிக்கு தேவையான உயிரணுக்களின் உற்பத்தி இந்த 12 முதல் 25 வயது வரை அபரிமிதமாக, அதாவது இரண்டு மடங்கு ஆற்றல் உற்பத்தி இந்த வயதுகளில் இருக்கும்
இச்சமயத்தில் பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் இளைஞனுக்கு சரியான கல்வி கிடைத்தால் மிக வலிமை மிகுந்த மனிதனாக சமுதாய பொறுப்புகள் உணர்ந்த மனிதனாக நல்ல பழக்க வழக்கங்களை உள்வாங்கும் திறன் பெற்ற மனிதனாக உருவாவது உறுதி
தற்காலத்தில் அந்நிய கல்வி மோகத்தாலும், ஆடம்பர வணிக முன்னேற்ற ஆசைகளாலும் உண்மையான பிரம்மச்சரிய சக்தியை சரியான விதத்தில் மடை மாற்றம் செய்யும் கல்வி முறைகளை இழந்து உள்ளோம்,
ஓரணு முதல் பரிணாம வளர்ச்சி அடைந்து படிப்படியாக ஆறறிவு ஆகி மனிதன் வரை வந்த பரிணாம வளர்ச்சியானது இதோடு நின்று விடலாமா? தற்போது ஐந்தறிவு ஜீவன்களுக்கு உள்ள கட்டுப்பாடு கூட இல்லாமல் மனித இனம் பலவீனம் அடைந்து வருகிறது
நம் முன்னோர்களும் சித்தர்களும் மனித இனம் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு செல்ல தேவையான பல்வேறு ரகசியங்களை நமக்கு அருளிச் சென்றார்கள் அதை அடைய நாம் பிரம்மச்சரிய வாழ்க்கையில் நிலைப்பது மிக அவசியம், இவ்வாறு நிலைக்கும்போது திருமூலர் அருளிய விந்து ஜெயம் போன்ற பயிற்சிகள் மூலம் நம்மை மேலும் வலிமைப்படுத்தி உயர் நிலைக்கு செல்லலாம்
ஆகவே ஒரு ஒரு ஆணும் ஒழுக்கத்தில் நிலை பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஒரு ஒரு பெண்ணும் கற்பு நெறியில் நிலைத்து வாழ வேண்டியது அவர்களுக்கு நன்மை பயக்கும்
இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இதைப் பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறுவது ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முக்கியமான கடமையாகும் மேலும் இதுபோன்ற பிரம்மச்சரிய சக்திகளைப் பற்றி உணராத பலருக்கும் நண்பர்களுக்கும் நாம் உணர்த்த வேண்டியது நம்முடைய எதிர்காலத்திற்கு மிக இன்றியமையாததாகும்
இனப்பெருக்க பாகங்கள் இறைவனுக்கு இணையாக போற்ற வேண்டும் என நம் முன்னோர்கள் உணர்த்த காரணத்தினாலேயே சிவத்துக்கு லிங்க வடிவம் செய்து வழிபாடு செய்யும் நடைமுறையை கொண்டுவந்தனர், அண்டத்தில் சிவமாக இருப்பது நம் உடலில் உயிராக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், இனி ஆயினும் உண்மை பிரம்மச்சரிய சக்தியை பற்றி போதித்து ஒழுக்கமான வழிகளில் குழந்தைகளை வளர்க்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture