brahmacharya power book

மாமரமும் கல்வியும்  – 14

இயற்கையில் தாவரங்கள்  இப்பூமியில் உள்ள அனைத்து சக்திகளையும் சூரிய ஒளியையும் எடுத்துக் கொண்டு தன்னையும் காத்து தன்னுடைய இனத்தையும் பெருக்க பூக்களையும் பழங்களையும் கொடுத்து, ஒட்டு மொத்த உலகுக்கும் உணவினை கொடுக்கும் அன்னையாகவும் இருக்கிறது, பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறது

 

உதாரணமாக ஒரு மாமரத்தில் இறுதி விளைவாக பழங்கள் வருகிறது இந்த பழத்தில் கொட்டைகள் இருக்கிறது அதனுள் மாமர விதை இருக்கிறது அந்த விதையே மாமரத்திற்கு தன்னுடைய இனத்தை பெருக்குவதற்கான மூல ஆதாரம்,

 

தன்னுடைய இனத்தை மட்டும் பெருக்க வேண்டும் எனும் சுயநலம் அதனிடம் இல்லை அதனாலேயே மாமரம் வெறும் விதைகளை மட்டும் கொடுக்காது அதனோடு இனைந்து,  பிற உயிர்களுக்கும் வாழ்வளிக்கும் உணவாக மாம்பழத்தை சுற்றியுள்ள தோல் அதை அதனோடு இணைந்த சதைப்பற்று அதனோடு இணைந்த நறுமணம், அதில் அடங்கிய இனிப்பு சுவை என தனக்குள்ளாக தன்னை மேம்படுத்திக் கொண்டு கனிகளாக வெளித் தள்ளுகிறது

 

அது போலவே நாமும் நாம் உண்ணும் உணவானது பிரபஞ்ச பஞ்ச பூதங்களை ஈர்த்து இறுதி விளைவாக நம்முடைய உயிரணுக்கள் மற்றும் விந்து சக்தியாக இறுதியில் வெளிப்படுகிறது!…

 

ஓரறிவு கொண்ட தாவரத்துக்கே உலகுக்கு பயன்படும் கனிகளை தர இயலும் எனில்  ஆறு அறிவு கொண்ட நாம் நம்முடைய விந்து சக்தியை துணையாக கொண்டு வீண் விரயம் செய்யாது  எவ்வளவோ சாதனைகளைச் செய்ய  இயலும்

 

மனித இனமும் தன்னை நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டு தன்னிடம் உள்ள எந்த ஒரு சிறந்த விஷயத்தை இந்த உலகத்திற்கு கொடுக்க இயலும் என்று ஆராய்ந்து இவ்வாறு ஆராய்ந்து பெற்ற ஆராய்ச்சியின் பலனாகவே பிரம்மச்சரிய கல்விமுறையை வடிவமைத்தார்கள்

 

முந்தைய காலங்களில் ஒட்டுமொத்த கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பிரம்மச்சரிய ஒழுக்கத்திற்கு அதிக  முக்கியத்துவம் அளித்தார்கள்

 

தற்காலத்தில் பிரம்மச்சரிய/ கற்பு ஒழுக்க பழக்கவழக்கங்களை போதிக்கும் பாடத்திட்டங்கள் பள்ளிகளிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டது, அல்லது ஒழுக்கம் என்பது உடை உடுத்துவது, நடப்பது உணவு உண்பது என்பது மட்டுமே என்று ஆகி விட்டது!

 

ஆனால் நம் முன்னோர் அக்காலகட்டத்தில் உண்மையான சுய ஒழுக்கங்களை மட்டும் அடிப்படையாக வைத்து மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய, அமைதியும் சமுதாய மேன்மையும் நிறைந்த  கல்வி முறைகளை தொகுத்து வாழ்ந்தனர்

 

இதுதான் நம்முடைய பாரத தேசத்தில் பண்டைய கால சிறப்பு நம்முடைய முன்னோர்கள் பல இழப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பிறகு பிரம்மசரிய கல்விமுறையை உருவாக்கி போதித்து வந்தனர்,

 

நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலும் வெளியுலக ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட நம் உள்ளாக தன்னை மேம்படுத்தும் தனக்குள்ளாக இருக்கும் சக்தியை வெளிக் கொணர்தல் அதன் மூலம் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கு கூட பயன்படும் படியாக   என்ன நன்மை செய்யலாம் என்று ஆழ்ந்து  சிந்தித்தனர்

 

தற்காலத்தில் பெரும்பாலும் கல்வி வணிக சூழ்நிலைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் நிலையில் நாம் இல்லாது இருந்தாலும், குறைந்த பட்சம் சுய ஒழுக்கம், கற்பு நெறியில் நிலைத்து வாழ்வது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture