brahmacharya power book

மனஉறுதியும் லட்சியமும் – 16

போட்டிகள் நிறைந்த இந்த கலியுக வாழ்வில் வெற்றி அடைய செய்ய அபரிமிதமான ஆற்றலும் அறிவும் இறைவனின் துணையும் நமக்கு தேவைப்படுகிறது

 

நம்முடைய உடலில் உணவின் மூலமும் பஞ்ச பூதங்களின் மூலமும்  உற்பத்தி ஆகும் ஆற்றலானது பல்வேறு மாற்றங்களுக்கு பின்பு இறுதியில் உயிரனுக்காளாக மாற்றம் பெறுகிறது

 

இவ்வாறு மாற்றம் பெரும் உயிரணுக்கள் முறையான கல்வியால் மேம்படுத்தாவிடில், பெண்களோடு இணைந்து வாழும் உலகில் இயல்பாக விந்து சக்தியாக மாற்றம் பெற்று விடுகிறது,  விந்து சக்தியாக மாற்றம் பெற்ற அந்த ஆற்றலானது  மூலாதார சக்கரத்தில், இடுப்பு பகுதியில்  சூழ்ந்து இருப்பதால்  காமம், போட்டி, பொறாமை, வஞ்சம், கவலை, பயம் போன்ற உணர்வுகளும்  அது சார்ந்த கீழ்நிலை  எண்ணங்களும் அதிகமாக வர  காரணமாகிறது

 

கீழ்நிலை எண்ணங்கள் என்பது எப்போதும் எதிரபாலினத்தோரை சார்ந்தே வாழ்வது, அடுத்த மனிதர்களிடம் சார்ந்து இருப்பது, சுய சிந்தனை அற்று இருப்பது, நினைவு திறன் குறைந்து இருப்பது போன்ற பலவீனத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது

 

நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் அல்லது நாம் மேற்கொள்ளும் உறுதிப்பாடும் சங்கல்பமும் முதலில் நம்முடைய மூளையின் மூலம் காந்த உடலின் ஜீவகாந்த களத்தில் பதிவாகிறது பின்பு அது நம்முடைய கரு மையத்தில் அதாவது உயிரணுக்களில் பதிவாகிறது

 

நாம் சுய இன்பத்தாலோ, இனப்பெருக்க செயல்பாடுகளாலோ  உயிரணுக்களை வீணாக்க தயாராகும் போது உடலானது தன்னிடம் உள்ள அதி வலிமை வாய்ந்த அனைத்து உயிராணுக்களையும் அடுத்த தலைமுறை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  அனுப்பி வைத்து விடுகிறது

 

இதனால் நாம் மிகவும் பலவீனம் அடைந்து நினைத்த எந்த எண்ணத்தையோ  கொடுத்த எந்த வாக்குறுதியையோ நிறைவேற்றும் சக்தி குறைந்த மனிதர்களாக மாற்றமடைகிறோம்

 

ஆறு ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு ஒரு நொடியும் புதிய புதிய நீர் திவலைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது, அது போலவே நம்முடைய மனம் நம்மோடு இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு நொடியும் உடலில் இருக்கும் உயிரணுக்களின் சூழற்சியினால் உற்பத்தியாகும் காந்த ஆற்றல் மனமாக மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது

 

இதனால் ஆற்றின் பிரவாகம் போல புதிது புதிதாக உற்பத்தியாகும் எண்ணங்கள் பழைய லட்சியங்களின் இருப்பை பலவீனம் அடைய செய்து விடுகிறது,  பழைய உயிரணுக்கள் விந்து சக்தி மூலமாக வீணாக்குவதன் மூலமாக நாம்   மன உறுதி அற்ற மனிதனாக மாற்றம் அடைகிறோம்

 

மன உறுதி அற்ற மனிதன் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலுமா?  பெரிய பெரிய லட்சியங்களை கொண்ட மனிதர்கள் பிரம்மச்சரியத்தில் நிலைத்த காரணத்தினாலேயே அதை சாதிக்க முடிந்திருக்கிறது

 

மூவுலகையும் வென்ற ராவணனின் மகனான இந்திரஜித்தை  வீழ்த்த லட்சுமணன் பன்னிரண்டு வருட பிரம்மசரிய வாழ்க்கையே துணை நின்றது

 

உயர்ந்த லட்சியங்களை அடைய துடிக்கும் மனிதனுக்கு பிரம்மசரியத்தை விட உற்ற துணை வேறெதுவும் இல்லை

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture