தவறான கல்வி முறையும், உண்மையான தீர்வும் – 17
தற்கால கல்விமுறை
தற்காலத்தில் அறிந்தோ அறியாமலோ நம் முன்னோர்களின் கல்வி முறை பெரும்பாலும் துடைத்து அழிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் இளைய தலைமுறை தன்னை மேம்படுத்திக் கொள்ளும் கலைகளில் தேர்ச்சி பெற இயலாது பெரும்பாலும் அந்நிய நாட்டினர் சிற்றின்ப வாழ்க்கை, தேவையற்ற போட்டி மற்றும் பணம் தான் வாழ்க்கை அவசியம் என்னும் கட்டாய கல்வி முறையில் சிக்கி தவிக்கிறோம்
பிரம்மச்சரியத்தை மறந்த கல்வி முறையினால், போதை பழக்கத்திற்கு உட்பட்டோர் நாட்கள் செல்ல செல்ல பலவீனம் அடைவது போல மாணவர்கள் வயது செல்ல செல்ல தன்னம்பிக்கை குன்றி உண்மையான வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பயன்படாத குப்பைகளால் நிரப்பப்பட்டு தன்னுடைய ஆற்றல்களையும் பலத்தையும் அறியாது வாழ்ந்து வருகிறார்கள்
தற்காலங்களில் ஆண்களும் பெண்களும் தங்கள் முழுமையான தனிதிறனை அறியாத காரணத்தினால் வெளிநாட்டு மயக்க கல்வி முறையில் வளர்க்கப்பட்டு குடும்ப உறவுகளிலும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகிறது சுயநல மிகுதியால் திருமண பிரிவுகள் சாதாரணமாகி அடுத்த தலைமுறை குழந்தைகளின் வாழ்வாதாரமும் பாதிப்பு அடைகிறது
ஒவ்வொருவரும் இயற்கையில் தன்னுடைய கடமையை உணர்ந்து மற்றவருக்கு மதிப்பு கொடுத்து வாழும்போதே மனித பிறவி அர்த்தமுள்ளதாகும் அதற்காக நம் முன்னோர்களால் வகுக்கப்பட்ட கல்வி முறையே பிரம்மச்சரிய கல்வி முறை
முன்னோர்கள் கல்வி முறையில் தீர்வு
இன்பத்தை நோக்கி செல்வதே வாழ்க்கை எனக்கொண்டால் மனித இனம் தானாகவே தேய்பிறையாக அழிவு பாதைக்கு சென்று விடும் , இதை உணர்ந்து நம் முன்னோர்கள் நம்மை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகையில் கல்வி முறையை வடிவமைத்திருந்தார்கள் , இக்கல்வி முறையில் பிரம்மச்சரியமே அனைத்து ஞானத்துக்கும் ஆதாரம் என்பதால் கல்வி கற்கும் காலத்தையே பிரம்மச்சரிய காலம் என அழைத்தார்கள்
நம் பண்டைய கலாச்சாரத்தில் 12 வயது கடந்த அனைவரும் கல்வி கட்கும் காலத்தில் கட்டாயம் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வாழ வேண்டும் அதற்காகவே ஒழுக்க பழக்க வழக்கங்கள் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன
பிரம்மச்சரிய காலத்தில் நம்முடைய உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றல் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் 64 கலைகள் தோற்றுவிக்கப்பட்டு மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறும் வகையில் கல்வி முறையை வகுத்தார்கள்
பிரம்மச்சரிய காலத்தில் ஆற்றலை முழுமையாக திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதாலேயே மாணவர்களை குடும்பத்தில் இருந்து விலக்கி குருகுலம் போன்ற இயற்கை சூழ்நிலையில் எதிர்பாலின கவர்ச்சி தோன்றாத வண்ணம் பாதுகாத்தார்கள்
இதன் காரணமாக பல்வேறு கலைகளும் வளர்ச்சி பெற்று தன்னை மேம்படுத்துவதிலேயே பெரும்பாலான கவனம் இருந்த காரணத்தால் இயற்கையும் காக்கப்பட்டு அனைத்து உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்து உதவி வாழும் வலிமை மிக்க இன்பம் பெருகும் சமுதாயம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்புடன் உலகுக்கே வழிகாட்டும் வகையில் நம் பாரத தேசம் திகழ்ந்தது, அதற்கு நம் தமிழ் முன்னோர்களும் துணை நின்றார்கள்
கிராமங்களில் ஒரு கூற்று உண்டு அதாவது புதிதாக பிறந்த நாய் குட்டியை கட்டி போட கூடாது சுதந்திரமாக விளையாட விட வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அந்த நாய் குட்டியானது கால்கள் வலிமை அடைந்து முழுமையான வளர்ச்சி அடையும்
அது போலவே நாம் குழந்தைகளை தாய் தந்தையர், தாத்தா பாட்டி உறவுகளின் அரவணைப்பில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து பதின்ம வயது வரை அதாவது பத்து வயது வரை நன்கு விளையாட விட்டு வளர்க்க வேண்டும்
அதன் பிறகு ஆண் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து பிரம்மச்சரிய குருகுலங்களில் சகல கலைகளையும் போதித்து வளர்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் தனக்கு விரும்பிய துறையில் திறன் மேம்பாடு அடைந்து சமுதாயம் பயன்படும்படி வளர்ந்து வருவார்கள்
மேலும் மாணவர்களை போல மாணவிகள் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அவர்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வாழ செல்வதால் அது வரையில் பெற்றோரின் அரவணைப்பில் குடும்ப நிர்வாகம் மற்றும் சகல கலைகளையும் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கலாம்
இதன் மூலமாக குடும்ப சமநிலை பாதுகாக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயம் வலிமை மிக்க சமுதாயம் உருவாக்க வாய்ப்பு உண்டாகும்
இளைஞர்கள் இருபத்தைந்து வருடம் வரை பிரம்மச்சரிய வாசம் புரிந்து வருவதால் அவர்கள் திருமணம் முடிந்து தன் தாய் தந்தையாரோடு நம்பி வந்த வாழ்க்கைத்துணையை காத்து அரவணைத்து வாழ வேண்டியது அவர்கள் கடமையாகும்
இதுவே நம் முன்னோரின் கல்வி முறையாகும் தடம் பிறழாத வாழ்க்கை நெறியாகவும் இருந்தது
இந்த முறையான பல பல ஆயிரம் ஆண்டுகள் நிரூபிக்கப்பட்ட நம்முடைய முறையான கல்வி முறைக்கு வாய்ப்பும் அதிகாரமும் இருக்கும் அனைவரும் உதவ முன்வந்தால் நிச்சயம் வலிமை மிக்க சமுதாயம் மீண்டும் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture