brahmacharya power book

இயற்கையில் தாவரங்கள்  இப்பூமியில் உள்ள அனைத்து சக்திகளையும் சூரிய ஒளியையும் எடுத்துக் கொண்டு தன்னையும் காத்து தன்னுடைய இனத்தையும் பெருக்க பூக்களையும் பழங்களையும் கொடுத்து, ஒட்டு மொத்த உலகுக்கும் உணவினை கொடுக்கும் அன்னையாகவும் இருக்கிறது, பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறது

 

உதாரணமாக ஒரு மாமரத்தில் இறுதி விளைவாக பழங்கள் வருகிறது இந்த பழத்தில் கொட்டைகள் இருக்கிறது அதனுள் மாமர விதை இருக்கிறது அந்த விதையே மாமரத்திற்கு தன்னுடைய இனத்தை பெருக்குவதற்கான மூல ஆதாரம்,

 

தன்னுடைய இனத்தை மட்டும் பெருக்க வேண்டும் எனும் சுயநலம் அதனிடம் இல்லை அதனாலேயே மாமரம் வெறும் விதைகளை மட்டும் கொடுக்காது அதனோடு இனைந்து,  பிற உயிர்களுக்கும் வாழ்வளிக்கும் உணவாக மாம்பழத்தை சுற்றியுள்ள தோல் அதை அதனோடு இணைந்த சதைப்பற்று அதனோடு இணைந்த நறுமணம், அதில் அடங்கிய இனிப்பு சுவை என தனக்குள்ளாக தன்னை மேம்படுத்திக் கொண்டு கனிகளாக வெளித் தள்ளுகிறது

 

அது போலவே நாமும் நாம் உண்ணும் உணவானது பிரபஞ்ச பஞ்ச பூதங்களை ஈர்த்து இறுதி விளைவாக நம்முடைய உயிரணுக்கள் மற்றும் விந்து சக்தியாக இறுதியில் வெளிப்படுகிறது!…

 

ஓரறிவு கொண்ட தாவரத்துக்கே உலகுக்கு பயன்படும் கனிகளை தர இயலும் எனில்  ஆறு அறிவு கொண்ட நாம் நம்முடைய விந்து சக்தியை துணையாக கொண்டு வீண் விரயம் செய்யாது  எவ்வளவோ சாதனைகளைச் செய்ய  இயலும்

 

மனித இனமும் தன்னை நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டு தன்னிடம் உள்ள எந்த ஒரு சிறந்த விஷயத்தை இந்த உலகத்திற்கு கொடுக்க இயலும் என்று ஆராய்ந்து இவ்வாறு ஆராய்ந்து பெற்ற ஆராய்ச்சியின் பலனாகவே பிரம்மச்சரிய கல்விமுறையை வடிவமைத்தார்கள்

 

முந்தைய காலங்களில் ஒட்டுமொத்த கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பிரம்மச்சரிய ஒழுக்கத்திற்கு அதிக  முக்கியத்துவம் அளித்தார்கள்

 

தற்காலத்தில் பிரம்மச்சரிய/ கற்பு ஒழுக்க பழக்கவழக்கங்களை போதிக்கும் பாடத்திட்டங்கள் பள்ளிகளிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டது, அல்லது ஒழுக்கம் என்பது உடை உடுத்துவது, நடப்பது உணவு உண்பது என்பது மட்டுமே என்று ஆகி விட்டது!

 

ஆனால் நம் முன்னோர் அக்காலகட்டத்தில் உண்மையான சுய ஒழுக்கங்களை மட்டும் அடிப்படையாக வைத்து மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய, அமைதியும் சமுதாய மேன்மையும் நிறைந்த  கல்வி முறைகளை தொகுத்து வாழ்ந்தனர்

 

இதுதான் நம்முடைய பாரத தேசத்தில் பண்டைய கால சிறப்பு நம்முடைய முன்னோர்கள் பல இழப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பிறகு பிரம்மசரிய கல்விமுறையை உருவாக்கி போதித்து வந்தனர்,

 

நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலும் வெளியுலக ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட நம் உள்ளாக தன்னை மேம்படுத்தும் தனக்குள்ளாக இருக்கும் சக்தியை வெளிக் கொணர்தல் அதன் மூலம் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கு கூட பயன்படும் படியாக   என்ன நன்மை செய்யலாம் என்று ஆழ்ந்து  சிந்தித்தனர்

 

தற்காலத்தில் பெரும்பாலும் கல்வி வணிக சூழ்நிலைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் நிலையில் நாம் இல்லாது இருந்தாலும், குறைந்த பட்சம் சுய ஒழுக்கம், கற்பு நெறியில் நிலைத்து வாழ்வது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

brahmacharya power book

 

பாலகர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் பத்து வருடங்கள் கடக்கும் போது மூளையானது போதுமான வளர்ச்சி பெற்றவுடன், உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றலானது முதுகு தண்டு வழியாக கீழிறங்கி இனப்பெருக்க பாகத்தை அடைகிறது,

 

அதாவது பத்து ஆண்டுகளுக்கு மூளைக்கான கட்டமைப்பு முடிந்தவுடன் மேலும் பத்து ஆண்டுகள் உடலினை கட்டமைக்க உயிராற்றலானது முதுகு தண்டு வழியாக மூலாதார சக்கரத்தை அடைகிறது, உடலின் வளர்ச்சியானது 25 வயது வரை நீடிக்கும்

அச்சமயத்தில் தூய பிரம்மச்சரியத்தில் ஒழுங்காக வளரும் ஆணோ பெண்ணோ முழுமையாக உடல் மன அளவில் வலிமை மிக்க வளர்ச்சி பெறுவார்கள், தகுந்த குருவின் துணையோடு கல்வி வாழ்வை துவங்குபவர்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெறுவார்கள்

 

ஒரு நல்ல சமுதாயத்தில்  வயதுக்கு வந்து பருவம் எய்திய ஒவ்வொரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஆரம்ப கால கட்டங்களிலேயே உடல் மாற்றங்களுக்கான காரணம், உயிர் சக்தியின் பெருமையும் முக்கியத்துவமும் உணர்த்தப்படுவது அவசியம்

 

பிரம்மச்சரியத்தில் நிலைத்து ஒழுக்கமாக வாழ வேண்டும் மேலும் அதனால்  உண்டாகும் பலன்களையும் அந்த ஞானத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே  பருவம் வந்த நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி மகிழும் பழக்கம் நம்மிடம் இன்றளவும் இருக்கிறது!

 

இப்போது நாம் உண்மையில் செய்வது என்ன ? பருவ வயதின் முக்கியத்துவம் புரியாது போனதால்  தற்காலத்தில் எல்லாம் வெறும் சடங்காக மாறி விட்டது

 

குறிப்பாக ஆண் குழந்தைகள் 12 வயது வரை உடலின் மொத்த ஆற்றலும் மூளை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் நம்முடைய முன்னோர்கள் அக்காலத்தில் பெற்றோர்களுடன் கழிக்க வேண்டும் என்று விதித்திருந்தார்கள்

 

அச்சமயத்தில் ஒவ்வொரு பாலகனும் உறவுகள் மற்றும் சுற்றத்தாரின் வாழ்க்கை முறை, பெற்றோரின் தொழில்களை உடனிருந்து சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தார்கள் 12 வயதுக்கு பிறகு நம் முன்னோர்கள் ஆய கலைகள் 64 என வடிவமைத்து குருகுலங்கள் மூலம் போதித்தார்கள், இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது இயல்பான அன்பும் சமுதாயத்தின் மீது அக்கறையும் சமமாக உயர்ந்தது

 

அதாவது உடலில் உற்பத்தியாகும் காம ஆற்றலானது மடை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு திறமைகள் உலகிற்கு பயனளிக்கும் விதமாக சரியான பயிற்சி அளிக்கப்பட்டு குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள்

 

உண்மையான பிரம்மச்சரிய கல்வி முறையாலேயே  நம்முடைய பாரத தேசத்தில் காலத்தால் அழியா புகழ் பெற்ற ஆயிரக்கணக்கான குருமார்களும் அவர்கள் மூலம் லட்சக்கணக்கான அறிவு செறிந்த  புத்தகங்கள் வேதங்கள் உபநிஷத்துக்கள் புராணங்கள் மந்திரங்கள்  சிற்பங்கள்  கோவில்கள் எல்லாம் உருவானது

 

தற்காலத்திலோ பெரும்பாலும் இளைஞர்கள் 12 வயதுக்கு மேல் உற்பத்தியாகும் உயிராற்றலை சுய இன்பம் போன்ற பழக்க தோஷத்தால் வீணாக்கிவிட்டு போதுமான அளவு உடல் வளர்ச்சி இல்லாமல், உடல் அளவிலும் மன அளவிலும் பாதிப்படைகிறார்கள்

 

சாதாரணமாக உடல் வளர்ச்சிக்கு தேவையான உயிரணுக்களின் உற்பத்தி இந்த 12 முதல் 25 வயது வரை அபரிமிதமாக, அதாவது இரண்டு மடங்கு ஆற்றல் உற்பத்தி இந்த வயதுகளில் இருக்கும்

 

இச்சமயத்தில் பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் இளைஞனுக்கு சரியான கல்வி கிடைத்தால்  மிக வலிமை மிகுந்த மனிதனாக சமுதாய பொறுப்புகள் உணர்ந்த மனிதனாக  நல்ல பழக்க வழக்கங்களை உள்வாங்கும் திறன் பெற்ற மனிதனாக உருவாவது உறுதி

 

தற்காலத்தில் அந்நிய கல்வி மோகத்தாலும், ஆடம்பர வணிக முன்னேற்ற ஆசைகளாலும் உண்மையான  பிரம்மச்சரிய சக்தியை சரியான விதத்தில் மடை மாற்றம் செய்யும் கல்வி முறைகளை இழந்து உள்ளோம்,

 

ஓரணு முதல் பரிணாம வளர்ச்சி அடைந்து படிப்படியாக ஆறறிவு ஆகி மனிதன் வரை வந்த பரிணாம வளர்ச்சியானது  இதோடு நின்று விடலாமா? தற்போது ஐந்தறிவு ஜீவன்களுக்கு உள்ள கட்டுப்பாடு கூட இல்லாமல் மனித இனம் பலவீனம் அடைந்து வருகிறது

 

நம் முன்னோர்களும் சித்தர்களும் மனித இனம் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு செல்ல தேவையான பல்வேறு ரகசியங்களை நமக்கு அருளிச் சென்றார்கள் அதை அடைய நாம் பிரம்மச்சரிய வாழ்க்கையில் நிலைப்பது மிக அவசியம், இவ்வாறு நிலைக்கும்போது திருமூலர் அருளிய  விந்து ஜெயம் போன்ற பயிற்சிகள் மூலம்  நம்மை மேலும் வலிமைப்படுத்தி உயர் நிலைக்கு செல்லலாம்

 

ஆகவே ஒரு ஒரு ஆணும் ஒழுக்கத்தில் நிலை பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஒரு ஒரு பெண்ணும் கற்பு நெறியில் நிலைத்து வாழ வேண்டியது அவர்களுக்கு நன்மை பயக்கும்

 

இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இதைப் பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறுவது ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முக்கியமான கடமையாகும் மேலும் இதுபோன்ற பிரம்மச்சரிய சக்திகளைப் பற்றி உணராத பலருக்கும் நண்பர்களுக்கும் நாம் உணர்த்த வேண்டியது நம்முடைய எதிர்காலத்திற்கு மிக இன்றியமையாததாகும்

 

இனப்பெருக்க பாகங்கள் இறைவனுக்கு இணையாக போற்ற வேண்டும் என நம் முன்னோர்கள் உணர்த்த காரணத்தினாலேயே சிவத்துக்கு லிங்க வடிவம் செய்து வழிபாடு செய்யும் நடைமுறையை கொண்டுவந்தனர், அண்டத்தில் சிவமாக இருப்பது நம் உடலில் உயிராக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், இனி ஆயினும் உண்மை பிரம்மச்சரிய சக்தியை பற்றி போதித்து ஒழுக்கமான வழிகளில் குழந்தைகளை வளர்க்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

brahmacharya power book

நம்முடைய உடலில் ஆற்றல் இழப்பு முக்கியமாக பின்வரும் ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது

 

  • ஐந்து புலன்கள்

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு போன்றவற்றால் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது

 

  • மனதின் வழியாக

கவலை, பயம் கோபம், பேராசை, தேவையற்ற எண்ணங்கள், கற்பனைகள், காம எண்ணங்கள் என மனதின் வழியாக அபரிமிதமான ஆற்றலானது வீணாகிறது

 

  • இனப்பெருக்கம்

விந்து சக்தி மூலம் வாரிசுகளை உருவாக்குவதற்காக அபரிமிதமான உயிரணுக்கள் அழிக்கப்பட்டு ஆற்றல் வெளியேறுகிறது

 

  • உணவு 

உடலுக்கு பொருந்தாத உணவுகள் எடுத்துக் கொள்ளும் போதும் அதனை செரிமானம் செய்யும் முயற்சியிலேயே உடலில் பெரும்பாலான ஆற்றல் இழப்பு உண்டாகிறது

 

  • உடலுழைப்பு 

உடலுழைப்பு அளவுக்கு மீறி செல்லும் போது ஆற்றல் இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனம் அடைகிறது

 

மேற்கண்ட ஐந்து வழிகளில் ஆற்றல் அபரிமிதமாக பல்வேறு சூழ்நிலைகளில் வீணாகிறது அவ்வாறாக வீணாகும் ஆற்றல்கள் முறையான வழியில் சீரமைத்தால் நாம் ஒவ்வொருவரும் அபரிமிதமான சாதனைகள் புரிய இயலும்,

 

இதையே திருவள்ளுவர் ஆமை தனக்கு ஆபத்து வரும் காலங்களில் எல்லாம் தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் தலையை  (ஐந்து உறுப்புகள்) தன்னுடைய ஓட்டின் உள்ளே இழுத்து காத்துக்கொள்ளும், அதுபோல நாமும் நம்முடைய ஐந்து புலன்களால் வீண் ஆகும் ஆற்றல்களை நமக்குள்ளாக சேமித்து கொள்ளும் வழி அறிந்தவர்களுக்கு அடுத்தடுத்து வரும் ஏழு தலைமுறை வாரிசுகளுக்கும் வலிமையும் ஆற்றலும் தங்கும் என்கிறார்

 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 

எழுமையும் ஏமாப் புடைத்து 

 

ஐம்புலன்கள் வழியாக காந்த ஆற்றலானது விரயம் ஆனாலும் அதனிலும் மேலாக காமத்தின் மூலம் சுய இன்பத்தாலும் இனப்பெருக்க செயல்பாடுகளாலும் வீணாகும் ஆற்றல் மிக மிக அதிகம்

 

ஒரு ஆற்றலானது மற்றொரு ஆற்றலாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும் இது இயற்கையின் நியதி,

 

பிரம்மச்சரிய வழியில் விந்து சக்தியை வீணாக்காமல் இருக்கும் போது நம்முள் உற்பத்தியாகும் அபரிமிதமான உயிராற்றல் காந்த ஆற்றலாக மாறி ஐந்து புலன்கள் வழியாக வெளியேற வாய்ப்பு உண்டாகும்,  அவ்வாறு வெளியேறும் ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்

 

சாதாரணமாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஒரு இளைஞன் பிரம்மச்சரியத்தில் இருந்தால் பல மணி நேரம் சோர்வின்றி பார்த்துக் கொண்டிருப்பான் இது போன்ற சமயங்களில் நாம் எச்சரிக்கையாக பிரம்மச்சரிய ஆற்றலை பயனுள்ள வழிகளில் திருப்ப வேண்டும்

 

அதற்காகவே நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விதமான யோக தியான பயிற்சிகள் வடிவமைத்து கொடுத்துள்ளனர், அவற்றை நாம் நம்முடைய பயிற்சியாகவும் செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக விந்து ஜெயம், காந்த தவம் சூரிய தவம், என பல பயிற்சிகளை தொகுத்து celibacy.in இணையத்தில் celibacy.in இணையத்தில் கொடுத்துள்ளோம்

 

இவ்வாறு அபரிமிதமாக வீணாகும் ஆற்றல்கள் காக்கப்படும்போது காந்த ஆற்றல் மிக்க மனிதர்களாக, வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைக்கும்  மனிதர்களாக, பிறவியின் நோக்கத்தை உணர்ந்து சாதிக்கும் மனிதர்களாக நிச்சயம்  மாற முடியும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture